கோவையில் மன அழுத்தத்தால் இருவர் தற்கொலை..

கோவை சவுரிபாளையம் காவெட்டி லே அவுட்டை சேர்ந்தவர் வசந்த் (வயது 35) இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.இந்த மன அழுத்தத்தால் வசந்த் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல சின்னியம்பாளையம் இருகூர் ரோடு ,ராமசாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் வசந்தகுமார் (வயது 26) டூவீலர் மெக்கானிக். இன்னும் திருமணம் ஆகவில்லை.இவரும் மன அழுத்தத்தால் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் புவனேஸ்வரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.