இரவல் வாங்கி கார் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு ..!

கோவை அருகே உள்ள குனியமுத்தூர், இ.பி.காலனியை சேர்ந்தவர் தென்னரசன்.இவரது காரை சரவணம்பட்டியை சேர்ந்த இவரது நண்பர் சூர்யா 10 நாட்களுக்கு இரவல் வாங்கி ஓட்டினார்.பின்னர் அந்த காரை கருரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் கொடுத்துவிட்டாராம். கார்த்திக்சரவணம்பட்டி சரவணனிடம் கொடுத்துவிட்டார்.காரை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து கார் ஓணர் தென்னரசு காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சரவணம்பட்டி சூர்யா, சரவணன் ஆகியோர் மீது மோசடி வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.