பைக் மீது லாரி மோதி மெக்கானிக் பரிதாப பலி..

கோவை மாவட்டம் கோவில்பாளையம், கொங்கு நகரை சேர்ந்தவர் ஞானவேல், இவரது மகன் ரவி பிரசாந்த் (வயது 22) மெக்கானிக். நேற்று இவர் அன்னூர் -கோவை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். குன்னத்தூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரி இவர் மீது மோதியது. இதில் ரவி பிரசாந்த் படுகாயம் அடைந்தார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.இது குறித்து அவரது தாயார் ராஜலட்சுமி அன்னூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு சென்று விசராணை நடத்தினார். இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த லாரி டிரைவர் சுனில் ( வயது 28 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.