கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரும் சென்னை புழல் சிறையிலிருந்து இருந்து கோவைக்கு அழைத்து வந்தனர்..!

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4மணி அளவில் கார் வெடித்தது .இதில் ஜமேஷாமுபின் ( வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23 )அப்சர் கான் ( 28 )முகமது தல்கா ( 25 ) முகமது ரியாஸ் ( 27 ) பெரோஸ் இஸ்மாயில் (26) முகமது நவாஸ் இஸ்மாயில்( 27 ) ஆகியோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என். ஐ.ஏ .(தேசிய புலனாய்வு முகமை )விசாரித்து வருகிறது .ஜமேஷா முபின் வீட்டில் 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ். ஆதரவு தொடர்பான குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. என். ஐ. ஏ. இந்த வழக்கை விசாரணை நடத்தி வருவதால் சென்னையில் உள்ள பூந்தமல்லி கோர்ட்டில் அனுமதி பெற்று கடந்த 4-ந்தேதி கோவை சிறையில் 6 பேரிடமும், என் ஐ.ஏ. அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் பூந்தமல்லி உள்ள என்.ஐ.ஏகோர்ட்டில் கைதான 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.. தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டது .இதற்காக என்.ஐ.ஏஅதிகாரிகள் புழல் சிறையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு 6 பேரையும் பேரில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் வழக்கு என்.ஐ. ஏ வுக்கு மாற்றப்பட்டதும் அவர்கள் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவே தான் இந்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த 6பேரையும் சென்னை அழைத்துச் சென்றனர் .தற்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டதால் மீண்டும் அவர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.இதற்காக ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.