தேர்தல் நடவடிக்கைகள் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு.!!

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர்களும் தேர்தல் அலுவலருமான மா.பிரதீப்குமாா், ஐ.சா. மொசி ரம்யா அகியோா் ஆய்வு செய்தனா்.
இங்குள்ள மின்னணு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ள அறைகளை ஆய்வு செய்த திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான மா. பிரதீப்குமாா், தேர்தல் பணிகளில் பாரபட்சமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற அலுவலா்களைக் கேட்டுக் கொண்டாா்.
மேலும், தேர்தல் பணிகளின்போது பராமரிக்கப்படும் பதிவேடுகளையும், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளா்களின் பதிவேடுகளையும் பிரதீப்குமாா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலருமான க. ஸ்ரீதா், வட்டாட்சியா்கள் பரணி (புதுக்கோட்டை), விஜயலட்சுமி (கந்தா்வகோட்டை) ஆகியோரும் உடனிருந்தனா்.