கோவையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை.!!

கோவை : நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது அல்லவா.? இதையடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்று முதல் கோவையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 10 தனிப்படைகள் கோவையில் பல்வேறு இடங்களில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.. தேர்தல் முடியும் வரை இரவு – பகலாக இந்த சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்..