வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதி டிராவல்ஸ் அதிபர் பரிதாப பலி..

கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரம் ,சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32) சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் அதே இடத்தில் இறந்தார்.இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பக்கம் உள்ள எச்சிக்கோட்டை ஆகும். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்கு வரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல் முருகன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக துடியலூர் என் .ஜி.ஜி. ஒ. காலனி, ரங்கம்மாள் காலனியை சேர்ந்த லாரி டிரைவர் சம்பத் (வயது 60) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது. சந்தோஷ் உடலுக்கு கோவை வியாபாரிகள் சம்மேளனம் மாவட்ட தலைவர் கே. ஆர். ராஜா மற்றும் நிர்வாகிகள் டிராவல்ஸ் அதிபர்கள், டிரைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.