கிரிக்கெட் விளையாடும் போது நடந்த விபரீதம்… மைதானத்தில் மயங்கி விழுந்து வாலிபர் மரணம்..

கோவை: கோவை தடாகம் ரோட்டில் உள்ள வேலாண்டிபாளையம், ஆனந்த அவுசிங் காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து .இவரது மகன் கார்த்திக்( வயது 27) இவர் நேற்று பீளமேடு கொடிசியா ரோட்டில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது தந்தை பேச்சிமுத்து பீளமேடு போலீசில் புகார் செய்தார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.