பெட்ரோல் பங்கில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு – ஊழியர் கைது..!

கோவை மாவட்டம் ஆனைமலை வள்ளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மது சந்திரன் (வயது 43 ) இவர் ஆனைமலையில் உள்ள பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பங்கில் வசூல் ஆன பணம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 860 ரூபாயை பாலிதீன் பையில் கட்டி மேஜை டிராயரில் வைத்திருந்தார். அதை பூட்டவில்லை. இந்த நிலையில் அதிலிருந்து பணத்தை காணவில்லை. யாரோ திருடி விட்டனர். இது குறித்து கேசியர் மது சந்திரன் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்த ஆனைமலை உப்பிலியர் வீதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு ( வயது 22) என்பவரை நேற்று கைது செய்தனர்.