தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலியான சோகம்..

கோவை மாவட்டம் நெகமம் ,பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் ஜோயில் ராஜா நோவா. இவரது மனைவி ஜாஸ்மின் ( வயது 33 )இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது இரண்டு மகள்கள் உள்ளனர் .ஜாஸ்மின் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவரது கணவர் ராமேஸ்வரத்தில் உள்ள மற்றொரு வங்கியில் வேலை பார்க்கிறார்.ஜாஸ்மின் நேற்று தனது குழந்தைகளை மாமனாரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜெர்லின் கிறிஸ்டோவை திடீரென்று காணவில்லை. அவரது மாமனார் தேடிய போது தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடந்தது தெரிய வந்தது. குழந்தையை தூக்கிக்கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றனர் .வழியில் குழந்தை இறந்துவிட்டது. இது குறித்து தாயார் ஜாஸ்மின் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..