3-வது திருமணம் செய்த பெண்ணும் பிரிந்து சென்றதால் மில் ஊழியர் எலி மருந்து தின்று தற்கொலை..

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம்,ஸ்ரீ விசாக நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரத்தின சீலன் (வயது 30 )இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார் .இவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி (வயது 39 )என்ற பெண்ணை 3 -வதாக திருமணம் செய்து கொண்டார்.கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி கடந்த 15 நாள் முன்பு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரத்னசீலன் எலி மருந்து தின்று வீட்டில் மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர் .அங்கு சிகிச்சைபலன் அளிக்காமல் நேற்றுஇறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.