கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை ராமநாதபுரம் ,நீர் மணியக்காரர் வீதியைச் சேர்ந்தவர் சசி மோகன். இவரது மனைவி துர்கா (வயது25 )ஐ .டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு 27- 6 -20 22 அன்று திருமணம் நடந்தது .துர்கா தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்காக தனது தாயார் பொன்முத்து வீட்டில் தங்கி உள்ளார். நேற்று அவரது தாயாரும்,அண்ணனும் துர்காவை வீட்டில் வைத்துவிட்டு கடைக்கு சென்று விட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது படுக்கை அறையில் துர்கா சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.இது குறித்து அவரது அண்ணன் விக்னேஷ் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ .எஸ் ஐ ..மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் கரிகால் பாரி சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்…