கணவர் செல்போன் அழைப்பால் நேர்ந்த விபரீதம்… மனைவி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள ஊஞ்சபாளையம், குட்டை தோட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். இவரது மனைவி திவ்யா ( வயது 31) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகன் உள்ளார். நேற்று இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அவரது மனைவி திவ்யா எடுத்துப் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர் உடனே அதை துண்டித்து விட்டார். இதனால் திவ்யாவுக்கும் அவரது கணவர் மல்லிகார்ஜுனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திவ்யா அவரது வீட்டில் விட்டத்தில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை சௌந்தர்ராஜன் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.