சாக்கடை கால்வாயில் மொபட் விழுந்து தொழிலாளி பலி..

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் மூர்த்தி ( வயது 46) கூலி தொழிலாளி. இவர் நேற்றுஅங்குள்ள கணக்கம்பட்டி அரசு பள்ளிக் கூட ரோட்டில் மொபட்டில்சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறு சாக்கடை கால்வாயில் மொபட்டுடன் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரைசிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி சித்ரா நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..