தொடரும் சோகம்… வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் சாவு..

கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். மலை ஏறும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 பேர் இறந்துள்ளனர்.நேற்று மேலும் ஒருவர் இறந்தார். அவரது பெயர் ரகுராம் ( வயது 50) சென்னை முகப்பேர் (மேற்கு) பகுதியைச் சேர்ந்தவர். இவர் நண்பர்களுடன் நேற்று முன் தினம் இரவில் மலையேறினார். 5 – வது மலை ஏறிக் கொண்டிருக்கும் போது இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. மயங்கி கீழே விழுந்தார். இவரை மலைவாழ் மக்கள் வனத்துறையினர் உதவியுடன் கீழே தூக்கி வந்தனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மகள் வர்ஷினி ஆலந்துறை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.