தேர்தல் பாதுகாப்புக்கு 4 கம்பெனி சிறப்பு காவல் படை கோவை வந்தது.!!

கோவை : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்புக்காக மத்திய துணை ராணுவ படையினர் ஏற்கனவே கோவை வந்துள்ளனர்.இவர்கள் கோவை – பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கூடுதல் பாதுகாப்புக்காக ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து 4 கம்பெனி சிறப்பு காவல் படையினர் ரயில் மூலம் இன்று கோவை வந்தனர். இவர்கள் நாளை முதல் கோவையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.