பைக்கில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் நேற்று மாலை அங்குள்ள குளத்துபுதூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் ( வயது 26) கிருஷ்ணகிரி பாரதிநகரை சேர்ந்த துளசிராமன் (வயது 24 7ஆனைமலை வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்த சாந்து முகமது (வயது 23) என்பது தெரியவந்தது. பைக்கும் ,கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.