கண்ணாமூச்சி விளையாடும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து 4-ம் வகுப்பு மாணவி பலியான சோகம்..

கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் பகத்சிங் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சரவணபிரசாத் . இவரது மகள்சாய் சதிவிகா ( வயது 9), அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சக குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் கண்களை துணியால் கட்டி கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்..இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து தாயார் கிருத்திகா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்