கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு.!!

கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் ஸ்ரீ சாந்தி துர்கா பரமேஸ்வரி ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 அடி உயரம் கொண்ட எவர்சில்வர் உண்டியலை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் செயலாளர் கே .வி. வாசு குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..