மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை..

கோவை: நெல்லை மாவட்டம்,  நாங்குநேரி பக்கம் உள்ள சிங்கனேரி ,பட்ட பிள்ளை புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43) இவர் தற்போது சின்னவேடம்பட்டி சுப்பிரமணிய நகரில் வசித்து வந்தார். இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு ஆளானார் .நேற்று தனது மனைவிக்கு செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மெசேஜ் அனுப்பி விட்டுஸ்டோர் ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்தும் மனைவி மாரியம்மாள் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.