மனைவிக்கு கத்தி குத்து – கணவருக்கு வலைவீச்சு.!!

கோவை அருகே உள்ள தெலுங்கு பாளையம் புதூர், சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48) ஆட்டோ ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார்..குடிப்பழக்கம் உடையவர்.இவரது மனைவி சத்யா (வயது 42)சம்பவத்தன்று கணவர் சண்முகம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவிடம் தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மனைவி சத்யா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.