ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதி முதியவர் பரிதாப பலி..

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,முத்து நகரை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது61) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு சென்ட்ரல் ஸ்டுடியோ சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் நந்தகோபால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ஏழுமலை (வயது 28) என்பவரை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.