கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சாவை தரையில் புதைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது .இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்திரா சுவைன் ( வயது 29) மித்தின் நாயக் ( வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் இருவரும் தற்போது நல்லாம்பாளையத்தில் தங்கி உள்ளனர்.இவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றது விசாரணையில் தெரியவந்தது .இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
Leave a Reply