தண்ணீர் தேடி வந்த பெண் புள்ளிமான் கிணற்றில் மூழ்கி பரிதாப பலி..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே
அய்யனார்குளம்  கிராமத்தில் பண்டாரம் என்பவரது கிணற்றில்
தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 1.1/2  வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.  தகவல் அறிந்த சிவலார்குளம் பீட் வனக்காப்பாளர் டென்சிங், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்து கிடந்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் நெட்டூர் அரசு கால்நடை மருத்துவர் ராமசெல்வம்  சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின் கோட்டமலை ரிசர்வ்  வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.