கரும்பு காட்டுக்குள் கஞ்சா செடி பயிரிட்ட வாலிபர் கைது..!

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கல்மண்டிபுரம் பகுதியில் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் கல்மண்டிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் விவசாயி சித்தராஜ் (26) என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள கரும்பு பயிருக்குள் கஞ்சா செடி வளர்த்து செடியை அறுவடை செய்து மாட்டு கொட்டகையில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்ததோடு கஞ்சா பயிரிட்ட விவசாயி சித்தராஜை கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..