சூலூர் தோட்டத்தில் நிர்வாண நிலையில் ஆண் சடலம் மீட்பு- கொலையா? போலீசார் விசாரணை.!

கோவை சூலூர், பீடம்பள்ளி அருகே உள்ள காரைக்குட்டை பகுதியில் மாணிக்கம் என்பவரது தோட்டத்தில் இன்று காலையில் நிர்வாண நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவரை யாரோ அடித்து கொலை செய்து பிணத்தை வீசிவிட்டு சென்றிருப்பதாக சந்தேகிக்கபடுகிறது.இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.