கோவை அரசு பஸ்சிலிருந்து தவறி விழுந்து பெண் பரிதாப பலி..

கோவை பக்கம் உள்ள பேரூர் செல்லப்ப கவுண்டனூர் புதூர் லீலா நகரை சேர்ந்தவர் மாணிக்கம் .இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 36) இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். செல்லப்பகுளம் பிரிவு அருகே பஸ்சிலிருந்து இறங்கும் போது தவறி கிழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் வழியில் இறந்துவிட்டார். இது குறித்து கணவன் மாணிக்கம் பேரூர் போலீசில்புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.