அடுத்தடுத்து அதிரடி காட்டும் புதிய டி.ஜி.பி… மக்களை நேரடியாக சந்திக்க திட்டம்.!!

மிழ்நாடு காவல்துறையின் டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் பணியாற்றி வந்த சைலேந்திர பாபு சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்ட நிலையில் காவல்துறையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.