கோவையில் ‘ஆட்டோ தம்பி’ என்ற “ஆட்டோ நூலகம் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்…!!

கோவை: ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோவில் நம்மை தேடி வரும் நூலகத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நாளை தொடங்கி வைக்கிறார்.

கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஆட்டோவில் பயணிப்பவர்களும், ஆட்டோ இயங்காத நேரத்தில் டிரைவர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பயணிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்படவுள்ளது. ரூ.20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் “ஆட்டோ தம்பி” என்ற பெயரில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆட்டோவில் புத்தகங்கள், நாவல்கள் இடம்பெறுகின்றன. சோதனை அடிப்படையில் துடியலூரை சேர்ந்த சையது என்பவரின் ஆட்டோவில் இந்த ஆட்டோ நூலகம் தொடங்கப்பட உள்ளது.
“ஆட்டோ தம்பி” என்ற இந்த ஆட்டோ நூலகத்தை தொலைபேசி மூலம் அழைத்து தங்களது இருப்பிடத்திற்கு வரவழைத்து பயணிக்கலாம் என்றும், இதனை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.