பேருந்து பயணிகளுக்கு தமிழக அரசு சொன்ன மகிழ்ச்சியான செய்தி… என்னனு தெரியணுமா… உள்ளே போய் பாருங்க…

சென்னை: அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம், சுவை உள்ளதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும், பயோ-கழிவறை இருக்க வேண்டும். உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. உணவகத்தில் உணவு விலை பட்டியல் அவசியம், எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக விற்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.