பெண்கள் காப்பகத்தில் இருந்து தப்பி ஓட முயன்ற பெண் தவறி விழுந்து சாவு…

கோவை கெம்பட்டி காலனியில்ஆதரவற்ற பெண்கள் நல காப்பகம் உள்ளது.இங்கு கடந்த ஆண்டு 19- 12- 2003 அன்று மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ரேவதி ( வயது 37) மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது 10 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன்அளிக்காமல் இறந்தார் .இது குறித்து கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.