முதியவர் வீட்டில் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு…

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் கோபாலன் (வயது 81) தனியாக நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் குருவாயூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோபாலன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.