நீலகிரி கூடலூர் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் தலைமையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது…

நீலகிரி மாவட்டம், கூடலூர் நெல்லியாலயம் பஜார் நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நெல்லியாளம் நகர மன்ற உறுப்பினரும் நகரமன்ற தலைவருமான சிவகாமி தலைமையில் நடைபெற்றது,
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை நகர மன்ற தலைவர் சிவகாமி மக்களுக்கு வழங்கினார்,உடன் மாவட்ட பிரதிநிதி நாகராஜ், யோகராஜ் இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீதி ராஜா, பசுபதி, கிளைச் செயலாளர் அன்பழகன், கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர், மற்றும் நெல்லியாலயம் பஜார் நியாயவிலை கடையில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்று சென்றனர்,.