புது வீட்டில் திருடிய 2 பெண்கள் கைது…

கோவை சிங்கநல்லூர் ,நீலி கோணாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 38 )இவர் ஒண்டி புதூர், வி. ஐ. பி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார் .இந்த வீட்டில் வைத்திருந்த 10 பெட்டி எலெக்ட்ரிக் ஒயர், கதவு, ஜன்னல், பிராஷ் பூட்டுக்கள் ஆகியவற்றையாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு 60 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து ரேணுகாதேவி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம்,அண்ணா நகரை சேர்ந்த பிரகாஷ் மனைவி தேவி (வயது 30) ஒண்டிப்புதூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த சந்திரன் மனைவி சரஸ்வதி ( வயது 40) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒயர், கதவு ஜன்னல் பூட்டுக்கள் மீட்கப்பட்டன.