மாநகராட்சி பள்ளிக்கூட வகுப்பறையில் காவலாளி மர்ம மரணம்..

கோவை பீளமேடு அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49) இவர் உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இரவு செல்வராஜ் வழக்கம் போல வேலைக்கு சென்றார். மறுநாள் காலையில் உள்பக்கமாக பூட்டிய வகுப்பறைக்குள் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று காவலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி செத்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.