வந்தவாசியில் பயங்கரம்… நள்ளிரவில் பாலத்தில் மோதி பற்றி எரிந்த பேருந்து… அலறியடித்து ஜன்னலை உடைத்து தப்பி ஓடிய பயணிகள்..!

ந்தவாசி அருகே தனியார் பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது. அலறியபடி பயணிகள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர்த்தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனியார் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்து வீரம்பாக்கம் அருகே உள்ள கூட்டு சாலையில் வந்த போது அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது. இதில் பேருந்தில் முன்பக்க சக்கரம் கழன்று திடீரென தீ பற்றி எரிந்து இருக்கிறது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறியபடி முன் பக்கத்திலும் ஜன்னல் கண்ணாடியை உடைத்தும் உயிர்த்தப்பினர். இதில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர்.

தீ பற்றி எரிந்து எலும்புக்கூடு ஆனது பேருந்து. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.