கோவை டைட்டில் பார்க்கில் கட்டிடவேலை செய்யும் போது 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் உயிரிழப்பு..!

டைட்டில் பார்க்கில் 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி.

கோவை: கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் ” டைட்டில் பார்க்” உள்ளது.இங்கு 6 -வது மாடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் பண்டிட் (வயது 20) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து கட்டிடவேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் திட்ட அதிகாரி சரவணன், பொது மேலாளர் மணிகண்டன், சூப்பர்வைசர் அமீர்கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.