கோவையில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி..

கோவை சாய்பாபா காலனி சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மனோஜ் குமார் (வயது 23) இவர் நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் மனோஜ் குமார் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சாய்பாபா காலனி சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ராகவன் (வயது 53) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.