சிங்காநல்லூர் திருமண தகவல் மையத்தில் விபசாரம்-2 அழகிகள் மீட்பு- ஒருவர் கைது..!!

கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு,கமலா மில் குட்டை ரோட்டில் ஒரு திருமண தகவல் மையம் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு திருமண தகவல் மையம் என்ற பெயரில் அழகிகளை வர வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக இதை நடத்தி வந்த சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்த சக்திவேல் (வயது 44 )வரதராஜபுரம் மேட்டை சேர்ந்த புஷ்பா (வயது 55) விபசார தொழிலில் ஈடுபடுத்தபட்ட உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சசிகலா (வயது 42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சசிகலாவும் புஷ்பாவும் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சக்திவேல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.