திருமணமான 75வது நாளில் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்..!

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32) நகைத் தொழிலாளி.இவரது மனைவி காயத்ரி (வயது 29) இவர்கள் இருவருக்கும் கடந்த 75 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் காயத்ரி தன்னுடன் கல்லூரியில் படித்த ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம். கடந்த 10-ந் தேதி கணவரிடம் சொல்லாமல் காயத்திரி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் . அவர் தனது காதலனுடன் எங்கோ மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கணவர் பிரகாஷ் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.