தீக்குளித்து வாலிபர் தற்கொலை..

கோவையை அடுத்துள்ள ஈச்சனாரி ஐயப்பா நகரை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது மகன் ஜோயல் சாம்ஜி (வயது 29) அங்குள்ள டீ கடையில் வேலை பார்த்து வந்தார் குடிப்பழக்கம் உடையவர்.கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .இதில் அவரது உடல் முழுவதும் கருவியது சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..