கோவை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் மோதல் : மாணவர் படுகாயம் – 3 பேர் கைது..!

கோவை வடவள்ளி அருகே உள்ள ஓனாபாளையத்தில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு கடந்த 28ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது அப்போது மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் அதே கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வரும் வடவள்ளி ,மருதம் நகரைச் சேர்ந்த சதீஷ் சரன் (வயது 21)தாக்கப்பட்டார். அவருக்கு கண், , முகம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது .இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அதே கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் ( வயது 20 )அருண் ஜோதிவேல் (வயது 19) பூசாரிப்பாளையம் அருண்குமார் (வயது 21) ஆகியோரை கைது செய்தனர் . இவர்கள் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 3 பேரும் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.