பவானிசாகர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் மின்கசிவு… கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதம்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது.
பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(47). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இவரது தோட்டத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு காரணமாக கரும்பு பயிரில் மின்சாரம் பாய்ந்து தீ பிடித்ததில் கரும்பு பயிர்கள் எரிந்து சேதமானது. உடனடியாக இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் காற்றின் காரணமாக கரும்பு தோட்டம் மேலும் தீ பற்றி எரிந்தது. வெட்டும் தருவாயில் உள்ள கரும்புத்தோட்டம் நான்கு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..