தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் படுகொலை – கோவையில் அதிர்ச்சி..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் பகுதியை சேர்ந்தவர் கணபதியப்பன். இவரது மனைவி பாப்பா ( வயது 70) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணபதியப்பன் .பாப்பா மற்றும் மகன் ஆகியோர் கணியூர் சுங்கச்சாவடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்களது சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார்கள். கணவுதியப்பன் அவரது மகன் வீடு கட்டுமான பணியை பார்ப்பதற்காக சென்றனர். மூதாட்டி பாப்பா மட்டும் வீட்டில் நேற்று தனியாக இருந்தார் . நேற்று இரவு 8 மணிக்கு கணவதியப்பனும் அவரது மகனும் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டில் தலையில் தாக்கப்பட்டு பாப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் விரைந்து சென்று விசாரணைநடத்தினார்கள். பாப்பா அணிந்திருந்த நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதனால் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? எதற்காக மூதாட்டியை கொலை செய்தனர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் . அவ
ரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..