லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கோவையில் கைது

லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கோவையில் கைது

கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜபாருல்லா சொந்தமாக லாரி வைத்து உள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்தார். இவரது லாரியில் இருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜபாருல்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அவரது நண்பர்களுடன் அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்பொழுது மூன்று பேர் லாரியில் இருந்து பேட்டரியை திருடிக் கொண்டு இருந்தனர். இதை அடுத்து அவர்களை ஜபாருல்லா பிடிக்க முயன்றார். அப்பொழுது ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதை அடுத்து அவரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கரும்பு கடையைச் சேர்ந்த ரிஸ்வான் சுகைல். இவர் தனது நண்பர்கள் முகமது ஷெரீப், அப்சல் ரகுமான் ஆகியோருடன் சேர்ந்து லாரியில் இருந்து பேட்டரியை திருடி விற்க முயன்றது தெரியவந்தது. இதை அடுத்து ரிஸ்வான் சுகைலை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.