தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ மீது கேரள போலீசார் வழக்குபதிவு

தெற்கு கேரள சிஎஸ்​ஐ மகா திருச்​சபை தலைமையகத்​துக்கு உட்பட்ட திரு​வனந்​தபுரம் அருகே பாளை​யம் எம்எம் தே​வால​யத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​ரலில் ஆக்கிரமித்​தது மற்​றும் அங்கு ஏற்பட்ட மோதல் தொடர்​பாக, கேரள நீதி​மன்ற தலை​யீட்​டில் 4 ஆண்​டு​களுக்கு பிறகு தற்​போது காவல் துறை​ நடவடிக்கை எடுத்துள்​ளது.

திருச்​சபை பங்கு மக்​களில் ஒருதரப்​பிரனரின் எதிர்ப்​பை​யும் மீறி, முன்​னாள் ஆயர் தர்​ம​ராஜ் ரசாலம், தற்​போதைய விளவங்​கோடு தொகுதி காங்​கிரஸ் எம்​எல்ஏ பிர​வீன், அவரது ஆதர​வாளர்​கள், தேவால​ய பூட்டை உடைத்து வன்​முறை​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டிருந்​தது. பிர​வீன் எம்​எல்ஏ உட்பட 16 பேர் மீது திரு​வனந்​த​புரம் மியூசி​யம் போலீ​ஸார் நேற்று வழக்கு பதிந்தனர்.