போதை தலைக்கேறி டாஸ்மாக் ஊழியர் பலி..!

Young depressed man

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ராஜு (வயது 46) இவர் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவர் வஞ்சியாபுரம்-குஞ்சி பாளையம் ரோட்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி காந்திமதி பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.