தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் சிபிசி சாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47) இவர் கே .என். ஜி .புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 23ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சிவக்குமார் தடாகம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.