தனியார் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளி திடீர் மரணம்..

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள அரசூர் ஊத்துப்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது .இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சொனலால் பட்டேல் (வயது 42)கடந்த 6 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நண்பர்களுடன் அங்கு தங்கி உள்ளார். குடிப்பழக்கம் மற்றும் புகையிலை பொருட்கள் அருந்தும் பழக்கமுடையவர்.நேற்று இவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் திடீரென்று மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.