கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி திடீர் மரணம்..

கோவை போத்தனூர்செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மேட்டூர்,சுவாமி விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 77)இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 4- 7 -2007 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்..இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்,வழியில் அவர் இறந்து விட்டார்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஜெயிலர் சிவராஜன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.